Search the blog

Custom Search

அன்பார்ந்த சகோதரர்களே...!


இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், அப்பாவி இளைஞர்கள் கைது என்று துன்பங்கள் தொடர்கதையாகாமல் தடுக்கவேண்டும் என்றால் நமது சமுதாயம் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகமான உறுப்பினர்களை பெற்று இருக்க வேண்டும்.

உப்பு சப்பில்லாத பிரச்சினைக்கெல்லாம் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்கட்சி செய்கிறது என்றால் அதற்கு உறுப்பினர் வலிமை இருப்பது தான் காரணம்.

நமது ஜனத்தொகை அளவிற்கு மன்றங்களில் உறுப்பினர் பிரதிநித்வம் நம்மிடம் இல்லாதது தான் நமது கோரிக்கைகளை நாம் வென்று எடுக்க முடியாமல் போகிறது.

உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க , நமது ஜனநாயக முறையில் தேர்தல் மட்டுமே காரணியாக அமைந்துள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக இருக்கும் நாம் ஒட்டுமொத்தமாக நமது பலத்தை நிரூபித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.

அடுத்ததாக நாம் தேர்ந்து எடுக்கும் வேட்பாளர் பாராளுமன்றத்தில் நமக்காக குரல் கொடுக்க கூடியவராக, பிரச்சினைகளின் தாக்கத்திற்கு தக்கவாறு ஆணித்தரமாக வாதங்களை முன்னெடுத்து செல்பவராக இருக்க வேண்டும்.

நமது கோரிக்கைகள் அனைத்தையும் மக்கள் மன்றத்தை கூட்டி சொல்லுவதை காட்டிலும்,பாராளு மன்றத்தில் ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்க நம்மால் முடியும்.

ஆகவே சகோதரர்களே..! நாம் அனைவரும் ஒரே கொள்கையில் ஒன்றுபட்டு, ஒரே சகோதரர்களாய் தேர்தல் களம் காண முயன்றிடுவோம்,இன்ஷா அல்லாஹ்.


                  posted by :   Rasheed Maricar


READ IN THIS BLOG :
കര്‍ണാടക തിരഞ്ഞെടുപ്പ്‌ : കന്നിയങ്കത്തില്‍ കരുത്തറിയിച്ച് എസ്.ഡി.പി.ഐ

READ IN TWO CIRCLES.NET :
SIO activists detained in Hyderabad for demanding utilization of minority funds

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.

link

Related Posts Plugin for WordPress, Blogger...